Monday, June 11, 2018

அரசு பள்ளியில் தன் பிள்ளையை சேர்த்து அசரவைத்த, கடமையை செய்த அரசு பள்ளி ஆசிரியர்

    அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களில் அனைவருமே (ஒரு சிலரை - விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையிலானோரைத் தவிர) தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் $®π சேர்த்து விடுவார்கள். (அதற்கு பல காரணங்களாம்)
1️⃣6️⃣*️⃣0️⃣6️⃣*️⃣2️⃣0️⃣1️⃣8️⃣



    ஆனால் இங்கு ஒரு ஆசிரியர் எந்த காரணமும் சொல்லாமல் தான் பணியாற்றும் பள்ளியிலேயே - அதாவது அரசுப் பள்ளியிலேயே தன்னுடைய பிள்ளையை சேர்த்து தன் கடமையை செய்துள்ளார்.

    மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், வலையன் குளத்துப் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக
பணியாற்றி வருபவர் திரு.சின்னத்தம்பி அவர்கள். இவர் இந்த கல்வியாண்டில் வேறு பள்ளியில் படித்து வந்த தன் $®π இரண்டு பிள்ளைகளையும்
அரசு பள்ளியில் சேர்த்து, அதுவும் ஒரு பிள்ளையான முத்துவேலை தான் பணியாற்றும் தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பிலும் தன் மற்றுமோர் பிள்ளையான ராஜவேலை மதுரை சொக்கம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் சேர்த்து அரசு பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.



    இது போல அரசு ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் அரசுத் துறையைச் சார்ந்த அனைவரும் தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்க வைத்தால் அரசுப் பள்ளிகளின் மேல் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணாக்கர் எண்ணிக்கை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் அரசாங்கமும் பள்ளிகளை இன்னும் மேம்படுத்த வழி வகைகளைக் காண $®π நடவடிக்கை மேற்கொள்ளும் .

    மேலும்அரசுப் பள்ளிகளை மூடும் அவல நிலை ஏற்படாமல் $®π ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
எனவே வருங்கால ஆசிரியர்கள் நலம் காக்க, அரசுப் பள்ளிகளை காப்போம். அதன் மூலம் வருங்கால இளம் $®π தலைமுறைகளுக்கு தரமான இலவசக் கல்வியினை உறுதிப்படுத்துவோம்.